ஆணாதிக்கத்துக்கு எதிராக அதிரடி தீர்ப்பு !

‘5 கோடி ரூபாய் பணம்…. குடியிருக்க வீடு !’

காதலித்து, திருமணம் செய்து, அந்த இனிய வாழ்வுக்கான அடையாளமாக ஒரு குழந்தையையும் பெற்றது அந்த ஜோடி. ஆனால், அருவியாகக் காதலைப் பொழிந்த காதலன், கணவனானபின் பணம், மனம் என எல்லா வழிகளிலும் மனைவியைத் துன்பப்படுத்தினார். இவ்வளவுக்கும் சமூகத்தில் பெரிய அந்தஸ்திலும் தனி அடையாளத்துடனும் இருக்கும் பெண் அவர். அவருக்கு அத்தனை சித்ரவதைகளையும் செய்த கணவர், தமிழகத்தின் முன்னாள் போலீஸ் ஐ.ஜி-யின் மகன் மைக்கேல் அருள்.



வார்த்தையைக் காப்பாத்தறதுக்காக, அவர் அந்தப் பொண்ணுகூட வாழ்ந்ததை பொறுத்துக்கிட்டேன். ஆனா, நம்ம 'ஜென்டில்னஸ்’ஸே சில சமயங்களில் ’வீக்னஸ்’ ஆயிடும். நான் போற பல இடங்கள்ல அவங்க ரெண்டு பேரும் ஜோடியா வருவாங்க. என் மாமியாரோட சொத்துக்கள எல்லாம் என் கணவர் மூலமா அந்தப் பொண்ணு அபகரிக்க முயற்சி பண்ணினாங்க. 'இவளால என்ன பண்ணிட முடியும்?’ங்கற எண்ணத்துல இந்த 35 வருஷமா எனக்கு அத்தனை துரோகங்களும் பண்ணினவருக்கு... என்னால என்ன பண்ண முடியும்னு சட்டத்தின் மூலமா காட்ட நினைச்சேன்.

மாமியார் இறந்த பிறகு குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அவர் மேல வழக்குப் போட்டேன். தன் மனைவியோட அன்பை அலட்சியப்படுத்தி அதை அவமதிக்கறவங்களுக்கு எல்லாம் சாட்டையடி கொடுத்து, எச்சரிக்கை மணி அடிச்சிருக்கு இப்போ இந்த தீர்ப்பு!'' என்றார் கம்பீரமான குரலில்!

''சமூகத்துக்கு பயந்து, அக்கம்பக்கத்துக்கு பயந்து, நமக்கு எதிரா நடக்கற கொடுமைகள வெளிய சொல்லாம, நமக்குள்ள மட்டும் வச்சு நாம அழுதுட்டு இருக்கிறதை, தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்குது ஆண் வர்க்கம். என் வாழ்க்கையை வெளிப்படையா சொல்றதுக்குக் காரணம், எனக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது. அப்படி நடந்தா சட்டரீதியா போராடி வெற்றி பெறணும்ங்கறதுக்காகத்தான்.

சில அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். அதையும் கடந்து போகணும். அந்த வலிகளை நான் தாங்கினதுனாலதான், எனக்கு மனக் கஷ்டத்தை தந்து என்னையும் என் குழந்தையையும் அநாதரவா விட்டுட்டுப் போனதுக்கு 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்கவும், என் மாமியார் வாழ்ந்த வீட்ல நான் குடியிருக்கறதுக்கான உரிமையை வழங்கியும் தீர்ப்பு தந்திருக்கு கோர்ட். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. மனம், அங்கீகாரம், வாழ்க்கை, வலி என சகலமும் சம்பந்தப் பட்டது.''

- அறுபது வயதைக் கடந்த அந்த பத்திரிகையாளார், ஒரு போராளியாகவே தெரிந்தார் நமக்கு!

நன்றி - அவள் விகடன்